Pages

Scroll

"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை! மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்!! மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"!!!

Sunday, June 23, 2013

ctober 2011
ஒவ்வொரு வருசமுந் தீவாளி எல்லோருக்கும் வரும்.ஆனா ஒரு காலத்துல அப்பிடியெல்லாம் ஏழங்களுக்கு இருந்ததில்ல.ஏன்னா அவங்க வருமானம் அப்பிடி.தீவாளி சாயந்திரமே எல்லா புள்ளைங்களும் வெடி வெடிக்க ஆரம்பிச்சுடுவாங்க,ஆனா எங்க பொழப்பு  நடு ராத்திரிக்கு மேல தான் ஆரம்பிக்கும்.கடைக்குப் போன அப்பா எப்ப திரும்பி வருவாருன்னு கண்ணு முழிச்சி கண்ணு முழிச்சி கண்ணே சோந்து போயிடும்.அப்பா ஆவலோட வந்து தூக்கக் கலக்கத்துல இருக்கிற எங்கல எழுப்பி வெடியும் ,சட்டையும் கொடுப்பாரு.அப்ப எங்க மொகத்துல தெரியுற சந்தோசத்தப் பாக்குறதுக்கு எங்க பிரண்ட்ஸ் இருக்க மாட்டாங்க. ஆனாலும் அப்பாவோட மொகத்துல தெரியுமே ஒரு சந்தோசம் அதுக்கு ஈடு இணை எதுவுமில்ல.இந்த தீவாளியிலயும் அப்பா இல்ல.அப்பா இல்லாத தீவாளி ஒரு தீவாளியா? மனசு மௌனமா அழுவுது. வழியில்லாம பிள்ளைங்களுக்காகன்னு  இந்தத் தீவாளியும் ஒரு காரணம் சொல்லியே கொண்டாடப் படுது.
P

No comments:

Post a Comment