Pages

Scroll

"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை! மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்!! மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"!!!

Saturday, May 25, 2013

தமிழிலக்கிய வினா -விடை 1000 அகர வரிசையில் வெளியிடப்பெற்ற முதல் நூல்

1.          அகத்திய மாணவர்களின் எண்ணிக்கை -12
2.          அகத்தியர் சங்கம் வைத்து தமிழ் வளர்த்ததாகக் கூறும் செப்பேடு - வேள்விக்குடிச் செப்பேடு
3.          அகநானூற்றில் 1,3,5,7 என ஒற்றைப்படை எண் கொண்ட திணைப்பாடல்கள் – பாலைத்திணை
4.          அகநானூற்றில் 10,20,30.40 போல 0,என முடியும்  திணைப்பாடல்கள்– நெய்தல்திணை
5.          அகநானூற்றில் 2,8,12,18 போல 2,8 ,என முடியும்  திணைப்பாடல்கள் – குறிஞ்சித்திணை
6.          அகநானூற்றில் 4,14,24,34 போல 4, என முடியும்  திணைப்பாடல்கள் – முல்லைத்திணை
7.          அகநானூற்றில் 6,16,26,36 போல 6,என முடியும்  திணைப்பாடல்கள் – மருதத்திணை
8.          அகநானூற்றில் பாடல் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் – நோய்பாடியார், ஊட்டியார்
9.          அகநானூற்றின் அடிவரையறை – 13 – 31 அடிகள்
10.       அகநானூற்றின் இரண்டாம் பகுதி – மணிமிடைப்பவளம்
11.       அகநானூற்றின் நூல் முழுமைக்கும் உரை எழுதியவர்கள் ,– வேங்கடசாமி  நாட்டார் , இரா.வேங்கடாசலம்பிள்ளை
12.       அகநானூற்றின் பாடல்களுக்கு உள்ள பழைய உரை எண்ணிக்கை– 90
13.       அகநானூற்றின் பிரிவுகள் – 3 ,களிற்றுயானைநிரை,மணிமிடைப்பவளம்,நித்திலக்கோவை
14.       அகநானூற்றின் முதல் பகுதி -களிற்றுயானை நிரை
15.       அகநானூற்றின் முதல் பதிப்பாசிரியர்  – வே.இராசகோபால்
16.       அகநானூற்றின் மூன்றாம் பகுதி – நித்திலக்கோவை
17.       அகநானூற்றுக்கு வழங்கும் வேறு பெயர் - நெடுந்தொகை
18.       அகநானூற்றுக்குப் பாயிரம் எழுதியவர் -– இடையன் நாட்டு மணக்குடியான் பால்வண்ணத்தேவன் வில்வதரையன்
19.       அகநானூற்றைத் தொகுத்தவர் – உப்பூரிக்குடிக்கிழார் மகனார் உருத்திரசன்மன்
20.       அகநானூற்றைத் தொகுப்பித்தவன் – பாண்டியன் உக்கிரப் பெருவழுதி
21.       அகப்பொருள் பாடுவதற்கேற்ற சிறந்த யாப்பு வடிவங்கள் -– கலிப்பா,பரிபாடல் ( தொல்காப்பியர்)
22.       அகராதி நிகண்டு ஆசிரியர் – சிதம்பரம் வனசித்தர்
23.       அகலிகை வெண்பா நூலாசிரியர் – சுப்பிரமணிய முதலியார்
24.       அசோகன் காதலி நாவலாசிரியர் - அரு.ராமநாதன்    
25.       அசோமுகி நாடக ஆசிரியர் - அருணாசலக் கவி
26.       அஞ்சி ஓடுவோர் மீது பகை தொடுதல் தழிஞ்சி
27.       அடிக்குறிப்புகளால் சிறப்பு பெற்ற நூல்கள் –ஐங்குறுநூறு,பதிற்றுப்பத்து
28.       அடிநூல் ஆசிரியர் –நத்தத்தனார்
29.       அடியார்க்கு நல்லாரை ஆதரித்தவர் -- பொன்னப்ப காங்கேயன்
30.       அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட அற நூல் திருக்குறள்
31.       அதியமானைச் சிறப்பித்துப் பாடிய புலவர் -ஔவையார்
32.       அந்தகக் கவிராயர் எழுதிய உலா – திருவாரூர் உலா
33.       அந்தாதித் தொடை முதலில் இடம் பெற்ற நூல் – பதிற்றுப்பத்து –நான்காம் பத்து
34.       அப்துல் ரகுமானின் சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற நூல் ஆலாபனை - 1999
35.       அப்பாவின் ஆசை,சிறுவர் நாடகம் – அரு.இராமநாதன்
36.       அபிதான சிந்தாமணி எனும் பேரகராதியை இயற்றியவர் – ஆ.சிங்காரவேலு முதலியார்
37.       அம்பிகாபதி அமராவதி நாடக ஆசிரியர் -   மறைமலையடிகள்
38.       அம்பிகாபதிக் கோவையைப் பாடியவர் - அம்பிகாபதி
39.       அம்மா வந்தாள் நாவல் ஆசிரியர் - தி.ஜானகிராமன்
40.       அமரதாரா எனும் கல்கியின் கடைசி நாவலைப் பூர்த்தி செய்தவர் – கல்கியின் மகள் ஆனந்தி
41.       அமிர்த சாகரர் பிறந்த ஊர் - தீபங்குடி
42.       அரக்கு மாளிகை  நாவலாசிரியர் –  லட்சுமி
43.       அரசனால்செய்யப்படும்சிறப்பு - மாராயம், எட்டி ,ஏனாதி,காவிதி,
44.       அரசனின் துயில் சிறப்பைக் கூறுவது - கண்படை நிலை வாகைத் திணை
45.       அரசனுக்கு அறிவுரை கூறுவது - செவியறிவுறூஉ –பாடாண்
46.       அரிகேசரி என அழைக்கப்படும் மன்னன் – நின்ற சீர் நெடுமாறன்
47.       அரிச்சந்திர புராண ஆசிரியர் - வீரகவிராயர்
48.       அரிமர்த்தன பாண்டியனிடம் அமைச்சராய் இருந்தவர் – மாணிக்கவாசகர்
49.       அருணகிரிநாதரின் சந்தப்பாடல் நூல் – திருப்புகழ்
50.       அரும்பைத் தொள்ளாயிரம் ஆசிரியர் -ஒட்டக்கூத்தர்
51.       அளவையால் பெயர் பெற்ற பழைய உரை – பன்னிருபடலம்
52.       அலி பாதுஷா நாடக ஆசிரியர் - வண்ணக் களஞ்சியப் புலவர்
53.       அவ்வையார் நாடக ஆசிரியர் – எத்திராஜு
54.       அவனும் அவளும் நூலின் ஆசிரியர் – நாமக்கல் கவிஞர்
55.       அழிந்துபட்ட படைக்கு மாறாகப் பிறர் நின்று தடுத்து நிறுத்துதல் - அழிபடைத்தாங்கல்          
56.       அறநெறிச்சாரம் பாடியவர்  - முனைப்பாடியார்
57.       அற்புதத் திருவந்தாதி பாடியவர் –  காரைக்காலம்மையார்
58.       அறிஞர் அண்ணா தமிழ் நாட்டின் பெர்னாட்ஷா என்றவர் – கல்கி
59.       அறுவகை இலக்கண ஆசிரியர் - வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்
60.       அன்று வேறு கிழமை புதுக்கவிதையாசிரியர் – ஞானக்கூத்தன்
61.       அன்னி மிஞிலி  காப்பிய நாடகம் எழுதியவர் – மு.உலகநாதன்
62.       அஷ்டபிரபந்தத்தின் மறுபெயர் – திவ்யபிரபந்த சாரம்
63.       ஆசாரக்கோவை ஆசிரியர் - பெருவாயின் முள்ளியார்
64.       ஆசாரிய ஹிருதயம் நூலாசிரியர் – அழகிய மணவாளர்
65.       ஆசிரியர் பெயர் தெரியாத சங்கப்பாடல்கள் எண்ணிக்கை – 102
66.       ஆட்டனத்தி ஆதிமந்தி ஆசிரியர் – கண்ணதாசன்
67.       ஆண்டவர் பிள்ளைத்தமிழ் பாடியவர் - சவ்வாது புலவர்
68.       ஆண்டிப் புலவர் எழுதிய நிகண்டு – ஆசிரிய நிகண்டு
69.       ஆணை ஆயிரம் அமரிடை வென்ற மாணவனுக்கு வகுப்பது – பரணி
70.       ஆத்மபோத பிரகாசிகை நூலாசிரியர் – சரவணமுத்துப் புலவர்
71.       ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியின் சிறப்பு- – கி.மு.800 காலத் தமிழ் எழுத்துக்கள் இடம்பெற்றது.
72.       ஆபுத்திரனுக்கு அட்சய பாத்திரம் தந்தவர் - சிந்தாதேவி
73.       ஆயிடைப்பிரிவு  -பரத்தையிற்பிரிவு
74.       ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம்’ என்ற நூலின் ஆசிரியர்-– கனகசபைப்பிள்ளை
75.       ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவுறுத்த எழுதப் பெற்ற இலக்கிய நூல் -குறிஞ்சிப் பாட்டு        
76.       ஆலவாயழகன் நாவல் ஆசிரியர்ஜெகசிற்பியன்
77.       ஆறாம் இலக்கணம் – புலமை இலக்கனம்
78.       ஆறில் ஒரு பங்கு நாவலாசிரியர் – பாரதியார்
79.       ஆறுமுக நாவலர்க்கு நாவலர் பட்டம் வழங்கிய நிறுவனம் –திருவாவடுதுறை மடம்
80.       இசை ஆராய்ச்சிக்குப் பெருந்துணை புரிந்த உரை – அடியார்க்கு நல்லார் உரை
81.       இசைச்சங்க இலக்கியங்கள் – குருகு ,வெண்டாழி, வியாழமாலை அகவல்
82.       இடைக்காலத்தில் தோன்றிய நாடகம் – குறவஞ்சி
83.       இடைச் சங்கத்தில்  இருந்த  மொத்த புலவர்கள் – 3700
84.       இடைச் சங்கத்தை ஆதரித்த அரசர்கள்  - 59
85.       இடைச்சங்க இலக்கியங்கள் – அகத்தியம் ,தொல்காப்பியம், மாபுராணம், பூதபுராணம்,இசைநுணுக்கம்
86.       இடைச்சங்கம் இருந்த இடம் – கபாடபுரம்
87.       இடைச்சங்கம் இருந்த மொத்த  ஆண்டுகள்  - 3700
88.       இதிகாச நிகழ்வுகள் அதிகம் இடம் பெற்ற நூல் – கலித்தொகை
89.       இந்தப்பூக்கள் விற்பனைக்கல்ல கவிதையாசிரியர் – வைரமுத்து
90.       இந்திய – அரபு எண்ணான பதின் கூற்று – பழந்தமிழர் கண்டுபிடிப்பு
91.       இந்திய மொழியில் முதன்முதலாக வெளிவந்த நூல் – துர்க்கேச நந்தினி ( 1865)
92.       இந்தியா எனும் இதழ் நடத்தியவர் - பாரதியார்
93.       இந்திரகாளியம் என்னும் பாட்டியல் நூலை எழுதியவர் – இந்திரகாளியர்
94.       இந்திராயன் படைப்போர் எழுதியவர் – புலவர் அலியார்
95.       இமிழ் குரல் முரசம் மூன்றுடன் ஆளும் எனும் அடிகள் இடம் பெற்ற நூல் – புறநானூறு
96.       இயல்,இசை,நாடகம் குறித்துக் கூறிய முதல் நூல் – பிங்கலம்
97.       இயற்பா , இசைப்பா எனப்பிரிக்கப்படும் நூல் - நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
98.       இயற்பெயர் சுட்டப்படும் சங்கப்புலவர் எண்ணிக்கை – 470
99.       இரகுநாத சேதுபதி மன்னனின் அவைக்களப் புலவர் – படிக்காசுப் புலவர்

100.   இரட்சணிய குறள் எழுதியவர் – எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை

No comments:

Post a Comment