Pages

Scroll

"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை! மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்!! மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"!!!

Saturday, May 25, 2013

தமிழிலக்கிய வினா - விடை 1000 .அகர வரிசையில் வெளியிட்ட முதல் நூல்

1.          இரட்டைப் புலவர்கள் பாடிய உலா- ஏகாம்பரநாதர் உலா
2.          இரட்டைப் புலவர்களின் பெயர் – இளஞ்சூரியன் ,முதுசூரியன்
3.          இரண்டாம் குலோத்துங்கனிடம் அமைச்சராய் இருந்தவர் -சேக்கிழார்
4.          இரத்தினச் சுருக்கம் இயற்றியவர் – புகழேந்திப் புலவர்
5.          இராபர்ட் டி நொபிலி தமிழகம் வந்த ஆண்டு - 17 ஆம் நூற்றாண்டுத் தொடக்கம்
6.          இராம நாடகக் கீர்த்தனைகள் எழுதியவர் – அருணாசலக்கவிராயர்
7.          இராமலிங்க அடிகள் பிறந்த ஊர் - மருதூர்
8.          இராமலிங்க அடிகளின் பாடல் தொகுப்பு - திருவருட்பா
9.          இராமாயண உள்ளுறைப் பொருளும் தென்னிந்திய சாதி வரலாறும் நூலாசிரியர் – சுப்பிரமணிய முதலியார்
10.        இராமானுச நூற்றந்தாதி பாடியவர் - அமுதனார்
11.       இராவண காவியம் நூலாசிரியர் - புலவர் குழந்தை
12.       இராஜ ராஜசுர நாடகம் நடிக்கப் பட்ட ஆண்டு – கி.பி.10-ஆம் நூற்றாண்டு
13.       இருபத்திரண்டு  மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் நூல் – திருக்குறள்
14.       இரும்புக் கடல் என அழைக்கப் படும் நூல் – பதிற்றுப் பத்து
15.       இருவகை நாடகம் –இன்பியல், துன்பியல்
16.       இலக்கண உலகின் ஏகசக்கரவர்த்தி - பாணினி
17.       இலக்கண விளக்கச் சூறாவளி இயற்றியவர் – சிவஞான முனிவர்
18.       இலக்கண விளக்கம் நூலாசிரியர் - திருவாரூர் வைத்தியநாத தேசிகர்
19.       இலக்கணக் கொத்தின் ஆசிரியர் – சுவாமிநாத தேசிகர்
20.       இலக்கிய உதயம் நூலாசிரியர்               - எஸ்.வையாபுரிப் பிள்ளை
21.       இலக்கியம் இதழாசிரியர் - சுரதா
22.       இலங்கேசுவரன் நாடக ஆசிரியர் – ஆர்.எஸ்.மனோகர்
23.       இல்லாண்மை எனும் நூலாசிரியர் – கனக சுந்தரம் பிள்ளை
24.       இளங்கோவடிகளுக்குக் கண்ணகி கதையைக் கூறியவர்- சாத்தனார்
25.       இறந்த மறவன் புகழைப் பாடுதல் - மன்னைக் காஞ்சி
26.       இறந்தவனின் தலையைக் கண்டு அவன் மனைவி இறந்துபடுவது- தலையொடு முடிதல்
27.       இறந்து பட்ட வீரர்களுக்குப் பாணர்கள் இறுதிகடன் செய்வது- பாண்பாட்டு – தும்பை
28.       இறையனார் அகப்பொருளுக்கு உரை எழுதியவர் - நக்கீரர்
29.       இறைவன் திருஞானசம்பந்தருக்குப் பொற்றாளம் அளித்த தலம் – திருக்கோலக்கா
30.       இறைவன் மாணிக்கவாசகரைஆட்கொண்ட ஊர் – திருப்பெருந்துறை
31.       ஈட்டி எழுபது நூலின் ஆசிரியர் - ஒட்டக்கூத்தர்
32.       ஈரசைச் சீரின் வேறுபெயர் - ஆசிரிய உரிச்சீர்
33.       ஈன்று புறந்தருதல் எந்தலைக் கடனே பாடியவர் - பொன்முடியார்
34.       .வே.சா வின் ஆசிரியர் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை
35.       உட்கார்ந்து எதிரூன்றல் காஞ்சி
36.       உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்றவர் - திருமூலர்
37.       உண்டாட்டு - கள்குடித்தல்
38.       உண்டாலம்ம இவ்வுலகம் எனப் பாடியவர் - கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி
39.       உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்ற நூல் - புறநானூறு
40.       உண்பவை நாழி ,உடுப்பவை இரண்டே –என்று பாடியவர் –நக்கீரர்
41.       உமைபாகர்  பதிகம் பாடியவர் – படிக்காசுப் புலவர்
42.       உயிர்களிடத்து அன்பு வேணும் எனப்பாடியவர் – பாரதியார்
43.       உரிச்சொல் நிகண்டு எழுதியவர் – காங்கேயர்
44.       உரிப்பொருள் எனத் தொல்காப்பியம் கூறுவது- ஒழுக்கம்
45.       உரை நூல்களுள் பழமையானது – இறையனார் அகப்பொருள் உரை –நக்கீரர்
46.       உரை மன்னர் எனக் கா.சு.பிள்ளை வியந்து பாராட்டப்படுபவர் -சிவஞானமுனிவர்
47.       உரையாசிரியச் சக்கரவர்த்தி – வை.மு.கிருஷ்ணமாச்சாரியார்
48.       உரையாசிரியர் என்றழைக்கப்படுபவர் - இளம்பூரணர்
49.       உரையாசிரியர்கள் காலம் -13- ஆம் நூற்றாண்டு
50.       உரையாசிரியர்கள் நூலாசிரியர் – மு.வை.அரவிந்தன்
51.       உரையாசிரியர்களால் அதிக மேற்கோள் காட்டப்பட்ட சங்கநூல் – குறுந்தொகை
52.       உரைவீச்சு நூலாசிரியர் - சாலை இளந்திரையன்
53.       உலக மொழிகள் நூலை எழுதியவர் - .அகத்தியலிங்கம்
54.       உலகப் பெருமொழிகளில் தனிநிலை வகை – சீனமொழி
55.       உலகம் பலவிதம் – சாமிநாத சர்மா
56.       உலகின் முதல் நாவல் – பாமெலா
57.       உவமானச் சங்கிரகம் நூலின் ஆசிரியர் – திருவில்லிபுத்தூர் திருவேங்கட ஐயர்
58.       உவமைக் கவிஞர்                    -சுரதா
59.       உழிஞை வேந்தனைத் திருமாலாகக் கொண்டு புகழ்ந்துரைப்பது  - கந்தழி
60.       உழிஞைத் திணைக்கான புறத்திணை – மருதம்
61.       உழுது வித்திடுதல் - உழி ஞைப்படலம்
62.       உள்ளத்தில் ஒளி உண்டாயின் ,வாக்கினிலே ஒலி உண்டாகும் ” – பாரதியார்
63.       உன்னம் - நிமித்தத்தை உணர்த்தும் மரம்
64.       ஊசிகள் கவிதை நூலாசிரியர் மீரா
65.       ஊர்கொலை - தீயிட்டு அழித்தல்
66.       ஊரும் பேரும் நூலாசிரியர் – ரா.பி. சேது பிள்ளை
67.       ஊரொடு தோற்றம் உரித்தென மொழிப –எனும் நூற்பா கூறும் இலக்கியத்தின் அடிப்படை –உலா
68.       ஊற்றங்கால் ஆண்டிப்புலவர் உரை எழுதிய நூல் – நன்னூல்
69.       எகிப்து பிரமிடுகளில் காணப்படும் தமிழ்நாட்டுப் பொருட்கள்- தேக்கு மரம், மசுலின் துணிகள்
70.       எகிப்து,சுமேரியா,மொகஞ்சதாரோ,ஹரப்பா நாகரிகங்களுக்கு அடிப்படையானவர்கள் – தமிழர்கள்
71.       எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை எழுதிய இரட்சண்ய யாத்திரிகம் – ஜான்பான்யன் எழுதிய The pilgrims progress
72.       எட்டுத் தொகை நூல்களில் அக நூல்கள் எண்ணிக்கைஐந்து
73.       எட்டுத்தொகை நூல்களில் அதிகமான அடி வரையறை கொண்ட நூல் – பரிபாடல்
74.       எட்டுத்தொகை நூல்களில் புற நூல்கள் – 3
75.       எட்டுத்தொகை நூல்களுள் அக நூல்கள் – ஐங்குறு நூறு ,குறுந்தொகை, நற்றிணை,   அகநானூறு,கலித்தொகை
76.       எட்டுத்தொகை நூல்களுள் அகமும்,புறமும் கலந்த நூல் – பரிபாடல்
77.       எட்டுத்தொகை நூல்களுள் புற நூல்கள் – புறநானூறு ,பதிற்றுப்பத்து
78.       எட்டுத்தொகைப்பாடல்களின் -  சிற்றெல்லை – 3 அடிகள் ,பேரெல்லை – 140 அடிகள்
79.       எண்பெருந்தொகை நூல் – எட்டுத்தொகை
80.       எதிர் நீச்சல்  நாடக ஆசிரியர் – கே.பாலச்சந்தர்
81.       எயில் காத்தல் நொச்சி
82.       எவ்வழி நல்லர் ஆடவர்,அவ்வழிநல்லை,வாழி நிலனே –என்றவர் – ஔவையார் –புறநானூறு
83.       எழுவாய் வேறுமைக்கு உருபு உண்டு என்றவர் – புத்தமித்திரர்
84.       என் சரிதம் ஆசிரியர் -.வே.சா
85.       ஏசு நாதர் சரித்திரம் நூலாசிரியர் - தத்துவ போதக சுவாமிகள்
86.       ஏமாங்கதத்து இளவரசன் நாவல் ஆசிரியர் – திரு.வி.
87.       ஏழகம்  - ஆட்டுக்கிடாய்
88.       ஏழைபடும் பாடு  நாவலாசிரியர்  - சுத்தானந்த பாரதியார்
89.       ஏறுதழுவுதல் கூறும் சங்க நூல் – கலித்தொகை
90.       ஐங். ஆதன்,ஆவினி,குட்டுவன்,கருமான்,கிள்ளி மன்னர்களைக் கூறும் நூல் – ஐங்குறுநூறு
91.       ஐங்.இந்திரவிழா,மார்கழி நீராடல்,தொண்டி ,கொற்கை  இடம்பெற்ற நூல் – ஐங்குறுநூறு
92.       ஐங்.கழனி ஊரன் மார்பு பழமை ஆகற்க – ஐங்குறுநூறு
93.       ஐங்.குறிஞ்சி நூறு பாடியவர் – கபிலர்
94.       ஐங்.நெய்தல் நூறு பாடியவர் – அம்மூவனார்
95.       ஐங்.நெற்பல பொலிக,பொன் பெரிது சிறக்க –இடம் பெற்ற நூல் –ஐங்குறுநூறு
96.       ஐங்.பாலை நூறு பாடியவர் – ஓதலாந்தையார்
97.       ஐங்.பேதைப்பருவ மகளிரின் விளையாட்டுக்கள் இடம்பெற்ற நூல் – ஐங்குறுநூறு
98.       ஐங்.மருதம் நூறு பாடியவர் – ஓரம்போகியார்
99.       ஐங்.முல்லை நூறு பாடியவர் – பேயனார்

100.   ஐங்குறு நூறு அடி வரையறை- 3 -6 அடிகள்

No comments:

Post a Comment