Pages

Scroll

"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை! மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்!! மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"!!!

Saturday, May 25, 2013

தமிழிலக்கிய வினா - விடை 1000, அகர வரிசையில் வெளியிடப்பெற்ற முதல் நூல்

1.          ஐங்குறுநூற்றில் கடவுள் வாழ்த்துப் பாடியவர் – பாரதம் பாடிய பெருந்தேவனார்
2.          ஐங்குறுநூற்றில் பழைய உரை உள்ள பாடல் எண்ணிக்கை -469
3.          ஐங்குறுநூற்றை முதலில் பதிப்பித்தவர் – உ.வே.சா
4.          ஐங்குறுநூற்றைத் தொகுத்தவர் – புலத்துறை முற்றிய கூடலூர்க் கிழார்
5.          ஐங்குறுநூற்றைத் தொகுப்பித்தவர் – யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
6.          ஐங்குறுநூறு அடிவரையறை – 3 – 6
7.          ஐங்குறுநூறு பாவகை – அகவற்பா
8.          ஐங்குறுநூறுக்கு உரை எழுதியவர் – ஔவை துரைசாமிப் பிள்ளை
9.          ஐந்திணை எழுபது நூலின் ஆசிரியர் – மூவாதியார்
10.       ஐந்திணை ஐம்பது ஆசிரியர் - மாறன் பொறையனார்
11.       ஐந்திலக்கணம் கூறும் தமிழ் நூல் வீரசோழியம்
12.       ஐந்திறம் – இந்திர வியாகர்ணம் எனும் சமஸ்கிருத இலக்கண நூல்
13.       ஐரோப்பிய நாடக அங்கங்கள் – 5 .
14.       ஒட்டக் கூத்தருக்கு வழங்கப்பட்ட விருது – காளம்
15.       ஒரிசி,சிச்சிபெரோ எனும் கிரேக்க சொற்களின் தமிழ்த் திரிபுகள் – அரிசி ,இஞ்சிவேர்
16.       ஒரு கொலை.ஒரு பயணம் ஆசிரியர் – சுஜாதா
17.       ஒரு நாள்  என்ற நாவல் ஆசிரியர் – க.நா.சுப்பிரமணியன்
18.       ஒரு புளியமரத்தின் கதை  நாவலாசிரியர் - சுந்தர ராமசாமி
19.       ஒரு மன்னனின் தமிழ்ப்பற்றை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட நூல் - குலோத்துங்கச் சோழனுலா
20.       ஒருபிடி சோறுசிறுகதை நூல் ஆசிரியர் – த.ஜெயகாந்தன்
21.       ஒருமனிதனின் கதை நாவல் ஆசிரியர் – சிவசங்கரி
22.       ஒருமுலையிழந்த திருமா உண்ணி – நற்றிணை
23.       ஒற்றை ரோஜா சிறுகதை ஆசிரியர்கல்கி
24.       ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று பாடியவர் – திருமூலர்
25.       ஓங்கிய சிறப்பின் உயர்ந்த வேள்வி ,மாங்குடி மருதன் தலைவனாக- எனக்கூறுவது– புறநானூறு
26.       ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே என்று பாடியவர் அப்பர்
27.       ஓடாப் பூட்கை உறந்தை எனக் கூறும் நூல்சிறுபாணாற்றுப்படை
28.       ஓர் இரவு,சந்திரமோகன் எழுதியவர் – அறிஞர் அண்ணா
29.       ஓவச் செய்தி ஆசிரியர் - மு.வ
30.       ஔவை சண்முகம் நடித்த முதல் நாடகம் – சத்தியவான் சாவித்திரி
31.       கங்கை மைந்தன் – தருமன்
32.       கடல் கண்ட கனவு நாவலாசிரியர் – சோமு
33.       கடல் புறா நாவலாசிரியர் – சாண்டில்யன்
34.       கடைச் சங்கத்தில்  இருந்த  மொத்த புலவர்கள் – 449
35.       கடைச் சங்கத்தை ஆதரித்த அரசர்கள்  - 49
36.       கடைச்சங்கம் இருந்த மொத்த  ஆண்டுகள்  - 1850
37.       கடைச்சங்கமிருந்த இடம்மதுரை
38.       கடைத்திறப்பு கவிதை நூலாசிரியர் - முருகு சுந்தரம்
39.       கண்டதும் கேட்டதும் நூலாசிரியர் – உ.வே,சா
40.       கண்ணதாசன் இயற்பெயர் - முத்தையா
41.       கண்ணீர்பூக்கள் கவிதை நூல் ஆசிரியர் – மு.மேத்தா
42.       கந்த புராண ஆசிரியர் - கச்சியப்ப சிவாச்சாரியார்
43.       கபிலர்-பாரி/ஔவை-அதியன்/பிசிராந்தையார்-கோப்பெருஞ்சோழன் நட்பு கூறும் நூல் – புறநானூறு
44.       கம்பதாசனின் இயற்பெயர் – ராஜப்பா
45.       கம்பர் தம் நூலுக்கு இட்ட பெயர் -  இராமவதாரம்
46.       கம்பராமாயணத்தை முதலில் பதிப்பித்தவர் – திரு.வேங்கடசாமி முதலியார்
47.       கம்பரை ஆதரித்த வள்ளல் - சடையப்பர்
48.       கம்மாள வாத்தியார் என அழைக்கப்பட்டவர் – முத்துவீர உபாத்தியாயர்
49.       கமலாம்பாள் சரித்திரம் நாவலாசிரியர் – ராஜம் ஐயர்
50.       கயக்கறு மாக்கள் கடிந்தனர் கேளாய் - மணிமேகலை
51.       கயிலைக்கலம்பகம் பாடியவர் – குமரகுருபரர்
52.       கரந்தை - ஆநிரை மீட்டல்
53.       கரித்துண்டு நாவலாசிரியர் – மு.
54.       கரிப்பு மணிகள் நாவலாசிரியர் – ராஜம் கிருஷ்ணன்
55.       கருணாமிருத சாகரம் எனும் இசையிலக்கண நூலாசிரியர் – ஆபிரகாம் பண்டிதர்
56.       கருப்பு மலர்கள் ஆசிரியர் -  நா.காமராசன்
57.       கல்கியின் முதல் நாவல் - விமலா
58.       கலம்பக உறுப்புகள்  - 18
59.       கலம்பகம் பாடுவதில் பெயர் பெற்றவர்கள் – இரட்டைப் புலவர்கள்
60.       கல்வெட்டு, இராமதேவர் என்று குறிப்பிடப்படுபவர் – சேக்கிழார்
61.       கலி.குறிஞ்சிக்கலி பாடியவர் – கபிலர் -29 பாடல்கள்
62.       கலி.நெய்தற்கலி பாடியவர் – நல்லந்துவனார் -34 பாடல்கள்
63.       கலி.பாலைக்கலி பாடியவர் –பெருங்கடுங்கோ[ அரசன்] -29 பாடல்கள்
64.       கலி.மருதக்கலி பாடியவர் – மருதனிள நாகனார் -35பாடல்கள்
65.       கலிங்கராணி நாடக ஆசிரியர் – அறிஞர் அண்ணா
66.       கலித்தொகை ,பரிபாடல் தவிர பிறநூல்கள் அமைந்த பா வகை – ஆசிரியப்பா
67.       கலித்தொகைக்கு உரை எழுதியவர் – நச்சினார்க்கினியர்
68.       கலித்தொகையில் இடம் பெற்றுள்ள பாடல் எண்ணிக்கை – 150
69.       கலித்தொகையில் உள்ள பாவகை – கலிப்பா
70.       கலித்தொகையில் கடவுள் வாழ்த்து பாடியவர் – நல்லந்துவனார்
71.       கலித்தொகையின் அடிவரையறை – சிற்றெல்லை 11 அடிகள் –பேரெல்லை 80 அடிகள்
72.       கலித்தொகையின் ஓசை – துள்ளலோசை
73.       கலித்தொகையை நல்லந்துவனார் கலித்தொகை எனப் பதிப்பித்தவர் – சி.வை.தாமோதரம்பிள்ளை
74.       கலித்தொகையைத் தொகுத்தவர் – நல்லந்துவனார்
75.       கலிப்பாவின் ஓசை – துள்ளலோசை
76.       கலிமுல்லைக்கலி பாடியவர் – சோழன் நல்லுருத்திரன் -17 பாடல்கள்
77.       கவரி வீசிய காவலன் - சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
78.       கவிஞர் துறைவனின் இயற்பெயர் - எஸ்.கந்தசாமி
79.       கவிஞர் மீராவின் இயற்பெயர் - மீ.ராஜேந்திரன்
80.       கவிமணி மொழிபெயர்த்த ஆசிய ஜோதி நூல்  மொழிபெயர்ப்பு – லைட் ----ஆஃப் ஆசியா
81.       கவிமணி மொழிபெயர்த்த உமர்கய்யாம் நூல்  மொழிபெயர்ப்பு – உமர்கய்யாம் - ரூபாயாத் –பாரசீக மொழி
82.       கவியின் கனவு ஆசிரியர் – எஸ்.டி.சுந்தரம்
83.       கவிராட்சசன் எனப்படுபவர் – ஒட்டக்கூத்தர்
84.       கவிராஜன் கதையாசிரியர்    - வைரமுத்து
85.       கற்றறிந்தார் ஏத்தும் நூல் – கலித்தொகை
86.       கனகாம்பரம் சிறுகதைத்தொகுப்பு ஆசிரியர் – கு..ராஜகோபாலன்
87.       கனகை எழுதியவர்- கா.அரங்கசாமி                     
88.       கன்னட மொழியின் முதல் நாவல் – கவிராஜமார்க்கம்
89.       கன்னற்சுவைதரும் தமிழே, நீ ஓர் பூக்காடு,நானோர் தும்பி என்று பாடியவர்– பாரதிதாசன்
90.       கன்னிமாடம் நாவலாசிரியர் – சாண்டில்யன்
91.       காக்கைப் பாடினியத்தின் வழி நூல் –யாப்பருங்கலம்
92.       காஞ்சி புராணம் ஆசிரியர் – சிவஞானமுனிவர்
93.       காந்திபுராணம் நூலாசிரியர் – அசலாம்பிகை அம்மையார்
94.       காந்தியக் கவிஞர்                     -  நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை                      
95.       காய்சின வழுதி மன்னனின் காலம் – கடைச்சங்க காலம்
96.       காரி  (கலுழ்ம்)  – காரிக்குருவி
97.       காரிகை எனப் பெயர் பெறும் யாப்பு வகை – கட்டளைக் கலித்துறை
98.       காழிவள்ளல் என அழைக்கப்படுபவர் – திருஞானசம்பந்தர்
99.       காளக்கவி எனப்படுபவர் - காளமேகம்                                                      
100.   காளமேகப் புலவரின் இயர் பெயர் – காளமேகம்
101.   கிரவுஞ்சம் என்பது – பறவை
102.   கிரேக்கத்திலிருந்து புதிய ஏற்பாட்டை மொழி பெயர்த்தவர் – தெமெலோ -1750                                               
103.   கில்லாடி எனும் சொல்லின் மொழி – மராத்தி
104.   கீழெண்கள் எனப்படுபவை – ஒன்றிற்கும் கீழ்ப்பட்ட பின்ன எண்கள்
105.   குட்டித் தொல்காப்பியம் – தொன்னூல் விளக்கம்
106.   குடவோலைத் தேர்தல் முறையைக் கூறும் நூல் –அகநானூறு – 77 வது பாடல்
107.   குண்டலகேசியில் கிடைத்துள்ள ப்படல் எண்ணிக்கை – 72
108.   குணவீர பண்டிதரின் ஆசிரியர் –வச்சநந்தி
109.   குதிரைப் படையின் மற மாண்பினைக் கூறல் - குதிரை மறம்
110.   குலசேகர ஆழ்வார் பிறந்த ஊர் – திருவஞ்சைகளம்
111.   குறட்டை ஒலி சிறுகதையாசிரியர் – மு.வரதராசன்
112.   குறிஞ்சிக் கிழவன் - முருகன்                                                                             
113.   குறிஞ்சித் தேன் ஆசிரியர் - நா.பார்த்தசாரதி                                              
114.   குறிஞ்சிப்பாட்டு பாடியவர் - கபிலர்
115.   குறுந்தொகை கடவுள்வாழ்த்துப் பாடியவர் – பாரதம்பாடிய பெருந்தேவனார்
116.   குறுந்தொகைக்கு உரை எழுதி பதிப்பித்தவர் – உ.வே.சாமிநாதையர்
117.   குறுந்தொகைப் பாடல்களின் எண்ணிக்கை – 400
118.   குறுந்தொகையில் எந்தப் பொருளுக்கு அதிக முக்கியத்துவம் உள்லது - உரிப்பொருள்
119.   குறுந்தொகையில் ஒன்பது அடிகளால் அமைந்த பாடல்கள் – 307,309
120.   குறுந்தொகையில் பாடல் அடிகளால் இடம்  பெறும் புலவர்கள் – 18 பேர்
121.   குறுந்தொகையில் பாடல் அடியால் பெயர் பெற்றவர்கள்
 – குப்பைக்கோழியார், காக்கைப்பாடினியார்,செம்புலப்பெயல் நீரார்
122.   குறுந்தொகையில் யாருடைய பாடல் அடிகளில் வரலாற்று செய்திகள் உள்ளன – பரணர்
123.   குறுந்தொகையின் அடிவரையறை – 4 -8 அடிகள்
124.   குறுந்தொகையின் மொத்தப் பாடல்கள் – 440
125.   குறுந்தொகையைத் தொகுத்தவர் – உப்பூரிக்குடிக்கிழார் மகனார் பூரிக்கோ
126.   குறுந்தொகையைப் பாடிய புலவர்கள் எண்ணிக்கை – 205
127.   கூத்துக்களைப் பற்றிக் கூறிய உரையாசிரியர்  - அடியார்க்கு நல்லார்
128.   கூழங்கைத் தம்பிரான் உரை எழுதிய நூல் -நன்னூல்
129.   கைந்நிலை பாடியவர் – புல்லங்காடனார்
130.   கைவல்ய நவ நீதம் எழுதியவர்            - தாண்டவராயர்
131.   கொங்கு தேர் வாழ்க்கை எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் –  இறையனார்
132.   கொங்கு நாடு நூலாசிரியர் – புலவர் குழந்தை
133.   கொடிமுல்லை கவிதை நூலாசிரியர்வாணிதாசன்
134.   கொற்ற வள்ளை - உலக்கைப் பாட்டு
135.   கோகிலாம்பாள் கடிதங்கள் நாவலாசிரியர்மறைமலைடிகள்
136.   கோவூர்கிழார் நூலாசிரியர் - கு.திருமேனி
137.   சகாராவைத்தாண்டாத ஒட்டகங்கள் கவிதை நூலாசிரியர் - நா.காமராசன்
138.   சங்க அகப்பாடல்களில் வரலாற்றுக் குறிப்புகள் அதிகமாகக் குறிப்பிடும் புலவர்– பரணர்
139.   சங்க இலக்கிய நூல்களை அழைக்கும் விதம் – பதினெண்மேற்கணக்கு நூல்கள்
140.   சங்க இலக்கியங்கள் – பத்துப்பாட்டு,எட்டுத்தொகை
141.   சங்க இலக்கியங்களில் உள்ள பாடல்கள் எண்ணிக்கை – 2352 + கடவுள் வாழ்த்து 16 =2368
142.   சங்க இலக்கியங்களில் காணப்படும் சங்கம் பற்றிய பெயர்கள்– புணர்கூட்டு,தொகை,கழகம்,தமிழ்நிலை.
143.   சங்க கால மணமுறையை விளக்கும் பாடல் அமைந்த நூல் –அகநானூறு -86,136 பாடல்கள்
144.   சங்க யாப்பு – 5,6-ஆம் நூற்றாண்டுகளில் தோன்றிய யாப்பிலக்கண நூல் 
145.   சங்கத் தமிழ் மூன்றும் தா எனப்பாடியவர் – பிற்கால ஔவையார்
146.   சங்கத்தைக் குறிக்கும் சொல் தமிழ் நிலை என்றவர் – இரா.இராகவையங்கார்
147.   சங்கப் புலவர்களுக்கான தனிக் கோயில் உள்ள ஊர் - மதுரை மீனாட்சி  சுந்தரேஸ்வரர்
148.   சங்கப்பாடல்  இயற்றியவர்களில்= அரசர்கள் 25- பெண்பாற் புலவர்கள் - 30
149.   சங்கப்பாடல்களில் மிக நீண்ட பாடல் –மதுரைக்காஞ்சி 782 அடிகள்
150.   சங்கப்பாடல்களின் மிகக் குறைவான அடிஎல்லை – மூன்று
151.   சங்கம் ஒன்று மட்டும் நிலவியது என்றவர்கள் – வி.ஆர்.இராமச்சந்திரன்.கே.ஏ.நீலகண்டசாத்திரியார்
152.   சங்கரதாசு சுவாமிகள் முதன் முதலில் தஞ்சையில் அரங்கேற்றிய நாடகம்- சித்திராங்கி விலாசம்
153.   சடகோபன் என் அழைக்கப்படும் ஆழ்வார் -  நம்மாழ்வார்           
154.   சதாவதானம் என்றழைக்கப்படும் புலவர் - செய்குத் தம்பிப் பாவலர்
155.   சதுரகராதி ஆசிரியர்வீரமாமுனிவர்
156.   சந்தக் கவிமணி பட்டம் பெற்றவர் - கவிஞர் தமிழழகன்
157.   சந்திரமோகன் நாடக ஆசிரியர் – அறிஞர் அண்ணா
158.   சமணர்கள் மதுரையில் நிறுவிய சங்கம் - வச்சிர நந்தி சங்கம்
159.   சமரச சன்மார்க்க சபை –எனும் நாடக சபைத் தொடங்கிய ஆண்டு – 1914
160.   சமஸ்கிருதம் எழுதப்படுகின்ற மொழியான காலம் – கி.பி 3 ஆம் ஆண்டு குப்தர் காலம்
161.   சரசுவதி அந்தாதி பாடியவர் – கம்பர்
162.   சர்வசமயக் கீர்த்தனையைப் பாடியவர் -  மாயூரம் வேத நாயகர்
163.   சவலை வெண்பா வைக் குறிப்பிடும் முதல் நூல் – பாப்பாவினம்
164.   சாகுந்தலம் மொழிபெயர்த்தவர் – மறைமலையடிகள்
165.   சிதம்பரச் செய்யுள் கோவையின் ஆசிரியர் – குமரகுருபரர்
166.   சிதம்பரப் பாட்டியலின் ஆசிரியர் – பரஞ்சோதியார்
167.   சிலப்பதிகார ஆராய்ச்சி நூலாசிரியர் - வெ.சு.சுப்பிரமணியாச்சாரியார்
168.   சிலம்பு கூறும் கொட்டிச் சேதம் – கேரளக் கதக்களி
169.   சிவக்கொழுந்து தேசிகரை ஆதரித்த வள்ளல் -சரபோஜி மன்னர்
170.   சிவஞானமுனிவரின் இயற்பெயர் – முக்காள லிங்கர்
171.   சிவந்தெழுந்த பல்லவன் பிள்ளைத்தமிழ் ஆசிரியர் - படிக்காசுப் புலவர்
172.   சிவப்பிரகாச சுவாமிகள் பிறந்த ஊர் - தாழை நகர்
173.   சிவப்பு ரிக்‌ஷா சிறுகதை ஆசிரியர் – தி.ஜானகி ராமன்
174.   சிவபெருமான் திருவிளையாடல்கள் எண்ணிக்கை – 64
175.   சிவயோகத்தில் அமர்ந்த யோகி – திருமூலர்
176.   சிற்றதிகாரம் என்று அழைக்கப்படும் நூல் – நன்னூல்
177.   சிற்றிலக்கியங்களின் வேறு பெயர்பிரபந்தங்கள்
178.   சிறிய பெருந்தகையார் – திருஞான சம்பந்தர்
179.   சிறுகதை மஞ்சரி சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் - எஸ்.வையாபுரிப் பிள்ளை
180.   சிறுபஞ்சமூலம் ஆசிரியர் – காரியாசான்
181.   சிறுமுதுக்குறைவி – கண்ணகி
182.   சின்ன சங்கரன் கதையாசிரியர்  - பாரதியார்
183.   சின்னூல் எனப்படுவது  -  நேமி நாதம்
184.   சீகன் பால்கு தமிழகம் வந்த ஆண்டு  - 1705
185.   சீகாழிக்கோவை எழுதியவர்    அருணாசலக் கவிராயர்
186.   சீதக்காதி என அழைக்கப்படுபவர் - செய்யது காதர் மரைக்காயர்
187.   சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து எழுதியவர் – திரு.வி.க
188.   சீறாப்புராணம் ஆசிரியர்  -  உமறுப்புலவர்
189.   சீனத்துப் பரணி பாடிய ஆண்டு 1975
190.   சுக்கிரநீதி வடமொழி நூலைத் தமிழ்படுத்தியவர்    மு.கதிரேசன் செட்டியார்
191.   சுகுண சுந்தரி நாவலாசிரியர் – வேதநாயகர்
192.   சுந்தரர் திருமணத்தைத் தடுத்தாட்கொண்டவர் – சிவன்
193.   சுமைதாங்கி ஆசிரியர் –  நா.பாண்டுரங்கன்
194.   சுயசரிதை நாவல்களுக்கு முன்னோடி நூல் – முத்துமீனாட்சி
195.   சுரதாவின் இயற்பெயர்  -  இராசகோபாலன்
196.   சுவாமிநாத தேசிகரின் வேறு பெயர் – ஈசானதேசிகர்
197.   சுவாமிநாதம் இயற்ரியவர் – சுவாமிகவிராயர்
198.   சுஜாதா இயற்பெயர் – ரங்கராஜன்
199.   சூடாமணி நிகண்டின் ஆசிரியர்  - மண்டல புருடர்

200.   செங்கோல் மன்னனை உழவனாக உருவகம் செய்து பாடுதல் - மறக்கள வழி- வாகைத்திணை

1 comment:

  1. YOUR NOTES ARE VERY USEFUL TO ALL TNPSC & TET STUDENTS... KEEP TO SHARE NOTES SIR... THANKS A LOT. YOUR HARDWORK IS SHOWEN IN YOUR NOTES...

    ReplyDelete